Saturday, September 15, 2007

புதிய கோணத்தில் யோசியுங்கள்


எல்லோருமே நாம் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பெரிய கூட்டங்களில் கூட கவனிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி மரியாதை கிடைக்கிறது என்று நினைத்து பொறாமைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். நாமும் கவனிக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது?
என்னுடைய நண்பர் ஹரி, தற்போது உதவி இயக்குநராக இருக்கிறார். அவரிடம் கதைகளைப் பற்றி பேசும் போது, அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை, அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக் கூடாது. அவர்கள் என்ன யூகிப்பார்கள் என்பதை யோசித்து, அது அல்லாத ஒரு காட்சியை வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்பார். இது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா? சினிமாவில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் மற்றவர்கள் நினைப்பதை விட வித்தியாசமாக யோசித்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் புகழ் பெற்ற கோர்டியமில் நகரில் கால் வைத்தான், தனது படைகளுடன். அந்த நகரை உருவாக்கிய மன்னன் ஒருவர் தேர் ஒன்றை மரம் ஒன்றில் மிக இருக்கமாக கட்டி வைட்த்திருந்தார். அந்த கயிற்றை அவிழ்ப்பவர் யோரோ அவர்தா ஆசிய கண்டத்தை வெற்றி கொள்ள முடியும் என்று அந்த நகர மக்கள் நம்பினார்கள். அந்த நகர மக்களின் நம்பிக்கையைப் பற்றி படை வீரர்கள் அலெக்சாண்டரிடம் சொன்னார்கள். உடன் அவரும் அதை பார்க்க விரும்பினார். அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
அவரும் கடுமையாக முயற்சித்தார். முடிச்சு இருக்கமாக இருந்ததால், அவிழ்க்க முடியவில்லை. திடீரென ஏதோ தோன்றியவராக எழுந்தார். விருட்டென உடைவாளை உருவினார். அந்த முடிச்சை நிமிடத்தில் அறுத்தார். சில விநாடிகளில் முடிச்சு அவிழ்ந்தது. அவர் படைகளுடம் நகருக்குள் போனார். பல தேசங்களை வென்றார். இன்றும் சரித்திரத்தில் அவர் வெற்றி பெற்ற மனிதனாக இருக்கிறார்.
இப்படித்தான் எல்லோரும் ஒரு வழியை யோசித்தால், நீங்கள் அவர்களில் இருந்து மாறுபட்டு யோசியுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றிப் பெறலாம். எல்லோராலும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். வெற்றி பெற்றவன் சொல்லுவதுதான் வேதம். எல்லோரும் லெப்ட் ரைட் என்று நடந்தால், நீங்கள் ரைட் லெப்ட் என்று நடங்கள் அத்தனை கூட்டத்திலும் நீங்கள் வேறுபட்டு நிற்பீர்கள். வெற்றி உங்கள் வசப்படும்.