குற்றங்கள் மலிந்து விட்டன. குற்றவாளிகள் சிலரில் இருந்து பலர் ஆகி விட்டார்கள். அகத்தின் அழகு இப்போதெல்லாம் முகத்தில் தெரிவதில்லை. சிரித்த முகத்தோடு, தான் செய்த கொலையை விவரித்து, வாக்குமூலம் கொடுக்கும் ஜென்டில்மேன் கள் நமக்கு மிகவும் பழகிய முகங்களாகி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வில்லத்தனத்தோடு, படிக்கிற வயதில் பக்காவாக கொலை செய்கிறான் மாணவன். யாரையோ அல்ல. கூடவே இருந்து சமைத்துப் போட்ட அத்தையை. பத்தாம் வகுப்பிலேயே பள்ளி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை வீசி எறிகிறாள் மாணவி. வீட்டில் யாருக்கும் தெரியாதாம். உறவும் சரி, ஊரும் சரி.. எதையுமே நம்ப முடியவில்லை.. வீட்டோடு பிள்ளையாக வளரும் கார் டிரைவர், கடத்தல் வேலை பார்க்கிறான்.. பால்காரன், பேப்பர்காரனை பார்த்தால் பயமாக இருக்கிறது. கொலைக்கும் கொள்ளைக்கும் துப்புக் கொடுக்கும் உளவு வேலையில் இவர்கள் கிரிமினல்கள் ஆகி விட்டார்கள். பத்துப் பாத்திரம் தேய்ப்பவள் பல கொள்ளைகளில் பக்கபலமாக இருக்கிறாள். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிய வறுமை குற்றவாளிகள் இப்போது சில, பல லகரங்களுக்கு ஆசைப்பட்டு கொலை செய்ய கற்றுக் கொண்டு விட்டார்கள். கூலிப்படை ரேஞ்சுக்கு அந்தஸ்து பெற்ற கும்பலும் இதில் அடங்கும்.இந்த ஷாக் தொடரின் நோக்கம், யாருக்கும் தெரியாத குற்றங்களை தேடுவதல்ல.. நம்மில் கலந்து நிற்கும் நயவஞ்சகர்களின் வில்லத்தனங்களை தோலுரிப்பதுதான். வீடு தேடி வந்து, வீட்டுக்குள்ளேயே இருந்து, நம்ப வைத்து நாசம் செய்யும் சில வில்லன்கள் பற்றி இந்த தொடர் விவரிக்கும். வில்லன்கள் வளைக்கப்பட்ட விதம் பற்றி அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர், வாசகர்களிடையே தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.இதோ, பீட்சா வில்லன் அறிமுகம்! எம்.ஏ. படித்தவன். பள்ளிப் பருவத்திலேயே ரேஸ் பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம். ரொமான்சுக்கு பஞ்சம் இல்லை. தனக்குப் பிடித்த வேலையாக, அவன் தேர்ந்தெடுத்தது, பீட்சா சேல்ஸ்மேன். ஆர்டரின் பேரில் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யும் வேலை. டிப்ஸ் பிளஸ் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இருந்தது. குமட்டல் மணம், தூக்கலான உப்பு, கசந்த காரத்துடன் கலர் கலரான கவரில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்க்கு குழந்தைகள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். நூடுல்ஸ், பர்கர், பீட்சா என்றால் போதும்.. மம்மி, டாடியையே சிறிது நேரம் மறக்கும் அளவுக்கு இன்றைய இளைய தலைமுறை இருக்கிறது. பீட்சா பிரியத்தில், ஒரு வில்லனிடம் வீணான மாணவியின் சோகம் இங்கே...தனது மகளைக் காணோம் என்றதும், பதறிப் போனார் அந்த தந்தை. தனக்கு நெருக்கமான அந்த அமைச்சரை உடனே போனில் அழைத்து விவரத்தை சொன்னார். போலீஸ் படை களமிறக்கப்பட்டது.மகளை தேடிய அந்த தந்தைக்கு, சென்னையின் இதயம் போன்ற பகுதியில் பங்களா. பெரிய இடத்து சமாசாரம் என்பதால் எந்த ஸ்டேஷன் லிமிட்டில் உங்கள் வீடு வருகிறது என்றெல்லாம் போலீசார் கேள்வி கேட்கவில்லை. தேடுதல் வேலை தீவிரமானது.பங்களாவில் மகள் இருந்த அறையை முழுக்க அலசினார்கள். டிரைவர், வாட்ச்மேன், சமையல்காரன் என எல்லோரையும் லேசாக தட்டிப் பார்த்தார்கள். இப்போதெல்லாம் போலீசுக்கு துப்பு கொடுப்பது செல்போன் மட்டும்தானே. அதை நாடினார்கள். மகளின் லேட்டஸ்ட் போன் பில்லை எடுத்தார்கள். சில நம்பர் சந்தேகமாக இருந்தன. ஒரு நம்பருக்கு போன் செய்த போது, அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. சந்தேகம் வலுத்தது. அந்த நம்பருக்கான முகவரியை போலீசார் டிரேஸ் செய்தனர். கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டின் மாடியில் போய் நின்றது போலீஸ். ஹவுஸ் ஓனர் சொன்னார். ‘‘சார்.. நேத்துதான் அந்தப் பையன் ரூமைக் காலி பண்ணிட்டு ஊருக்கு போனான். நாகர்கோவிலுக்கு பக்கத்துல அவன் ஊர். படிச்சுருக்கான். பிரபலமான பீட்சா கடைல வேலை செய்றான். என்ன பிரச்னைனு தெரியல. திடுதிப்னு காலி பண்ணிட்டு போய்ட்டான். மத்தபடி அவன் நல்ல பையன்தான்’’ என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார். போலீசாருக்கு புரிய ஆரம்பித்தது. பெரிய இடத்து மாணவி, நாகர்கோவிலுக்கு பீட்சா பையனோடு கிளம்பிருச்சுங்கிறது தெரிந்தது. பித்துப் பிடித்து வீட்டில் முடங்கியிருந்த அந்த தந்தைக்கு தகவல் சொல்லப்பட்டது. பதறியவர், மெல்ல நிதானத்துக்கு வந்தார். வீட்டில் இருந்த சூழ்நிலையே, அவரது மகளுக்கு இப்படி ஒரு அவலம் நேரக் காரணம் என்பதை ஒப்புக் கொண்டார்.ஆபீஸ்.. வீடு.. இதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அவருடைய மனைவியும் படித்தவர். தனியார் நிறுவனத்தில் வேலை. மாதர் சங்கங்கள், கிளப்களில் ஈடுபாடு. ஒரே மகள். செல்லமாக வளர்த்திருக்கிறார்கள்.எல்லோர் வீட்டிலும் மாதிரி, கேட்டதை வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்த்தார்கள். ஸ்கூலுக்கு போய்விட்டு வந்து அவளே சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்வது, வெளியே செல்ல ஆட்டோவை அழைப்பது, கால் டாக்சியை கூப்பிடுவது என எல்லாமே அவளுக்கு கற்றுத் தந்திருந்தார்கள்.பீட்சா, பர்கர் என தான் விரும்பியதை அவளே டயல் செய்து வரவழைப்பாள். அப்படி வீட்டுக்கு வந்த ஒரு பீட்சா பாய்தான், இன்றைக்கு ஒரு வீட்டின் நிம்மதியையே சீர்குலைத்து விட்டான். பீட்சாவோடு சேர்த்து, மெல்ல மெல்ல ரொமான்சையும் கடைவிரித்து அவள் மனதைக் கலைத்து விட்டான்.பீட்சா வில்லனைத் தேடி நாகர்கோயில் போனது போலீஸ் படை. சொந்த ஊரில் அவன் அம்மாவும் அப்பாவும் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும் அவன் இங்கே வரவே இல்லை என்று சாதித்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, ‘நேற்று ஒரு பெண்ணோடு வந்தான், சார்...’ என்று சொன்னார்கள்.அவன் பெற்றோரை ‘முறையாக’ போலீசார் விசாரிக்க, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக சொன்னார்கள். இருவரையும் கொத்தாக அள்ளிக் கொண்டு போலீஸ் சென்னை திரும்பியது.காதல் மோகத்தில் அந்த பெண் பெற்றோருடன் திரும்பிவர மறுத்தாள். அவளின் பிடிவாதத்தைப் பார்த்து போலீசே அதிர்ந்து போனது. மேலிடத்து உத்தரவாயிச்சே... அவனை துவைத்து விசாரிக்க ஆரம்பித்தனர்.அவன் வாய் திறந்ததில், போலீசார் விக்கித்துப் போனார்கள்.சென்னையில் நிறைய பீட்சா கடைகளில் வேலை பார்த்து விட்டேன். பணக்கார வீடுகளில் இருந்துதான் பெரும்பாலும் அழைப்பு வரும். அதிலும், குறிப்பாக சின்ன வயதுப் பெண்கள்தான் போன் செய்து பீட்சா, பர்கர் என்று ஆர்டர் கொடுப்பார்கள். அதை எடுத்துச் செல்லும் போதே அவர்கள் வீட்டையும், வீட்டில் உள்ளவர்கள் பற்றியும் நோட்டம் போடுவேன். இளம் பெண்கள் யாராவது பீட்சா ஆர்டர் செய்தால், அடுத்த முறை என்னிடமே நேரடியாக ஆடர் கொடுங்கள் என்று சொல்லி என்னுடைய மொபைல் நம்பரை கொடுத்துவிட்டு வருவேன். இரண்டு மூன்று நாட்களாகியும், அந்த பெண் பேச வில்லை என்றால், நானே போன் செய்து ‘பீட்சா வேணுமா?’ என்று கேட்பேன். அதன் பிறகு அந்த பெண்களோடு மெல்ல மெல்ல பழகுவேன். அவர்கள் எந்த நேரத்தில் தனியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களிடம் போனில் அரட்டை அடிப்பேன். பிறகு காதல் வலை விரிப்பேன். வலையில் விழும் பெண்கள, நைசாக பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பேன். வீட்டில் இருந்து வெளியே வரும் பெண்களை சொந்த கிரமத்துக்கு அழைத்துச் செல்வேன். என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவேன். பின்னர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கேரளா சென்று விடுவேன். அந்த பெண்ணிடம்,
Monday, August 02, 2010
வீடு தேடி வரும் வில்லன்கள்!ஷாக் தொடர்
Subscribe to:
Comments (Atom)